ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் 108 பால்குட அபிஷேக விழா
காஞ்சிபுரம் சிறு காவேரி பாக்கம் வினாயகபுரத்தில் உள்ள ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் 108 பால்குட அபிஷேக விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் சிறு காவேரிப்பாக்கம் விநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் பால்குட அபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் சர்வதீர்த்தகரையில் அமைந்துள்ள அருள்மிகு தவளேஸ்வரர் ஆலயத்தில் இருந்து 108 பெண்கள் பால்குடம் எடுத்து பல்வேறு வீதிகளில் வலம் வந்து கருமாரி அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் அளகு குத்திக் கொண்டு தங்களின் கடனை சமர்ப்பித்தனர் விழா ஏற்பாடுகளை அச்சுக்கட்டு விநாயகபுரம் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அம்பாளின் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
.jpg)

.jpg)
No comments
Thank you for your comments