Breaking News

காஞ்சிபுரம் செவிலிமேடு அருகே கூலி தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் என்பவரின் மகன் விஜய் வயது 22.இவர் கொத்தனாராக இருந்து வருகிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரின் தந்தை இறந்துவிட கஞ்சா போதை அதிகளவில் அடிமையாகி தாய் பஞ்சாலியுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டு தனது வீட்டின் அருமையிலேயே வீடு வாடகை எடுத்து வசித்து வந்துள்ளார்.


இந்நிலையில் இன்று தனது மகனை வெளியில் பார்த்திடாத தாய் பாஞ்சாலி சந்தேகமடைந்து தனது மகன் வசித்து வந்த வீட்டின் தகவை திறந்து பார்த்த போது சரமாரியான வெட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் இருந்துள்ளார்.இதனை கண்ட அவரது தாய் பாஞ்சாலி அதிர்ச்சியடைந்து கத்தி கதறி அழுதுள்ளார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் விஜயின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமைனைக்கு அனுப்பி வைத்து முன்விரோதம் காரணமாக இப்படுகொலை சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments