அகத்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
தேசிய வன மகோத்சவ விழாவை முன்னிட்டு வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச் சுழல் மன்ற (Environmental Club) மாணவ மாணவியர் சார்பில் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், காடு செழித்தால் நாடு செழிக்கும் என்ற நோக்கத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக வாலாஜாபாத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனை, அரசு மருத்துவ மனை, இரயில் நிலையம், வட்டார கல்வி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் நிழல் தரும் மரக் கன்றுகள் நடப்பட்டன.
இதில் ஒன்றிய பெருங்குழுத் தலைவர் ஆர் கே தேவேந்திரன், துணைப் பெருந்தலைவர் ப.சேகர், வாலாஜாபாத் வட்டாட்சியர் லோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜகுமார் மற்றும் லோகநாதன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வையாவூர் உலகநாதன், அளவூர் நாகராஜ், பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி, துணைத் தலைவர் ஏவி சுரேஷ், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மரு விமலா, மரு இராஜேந்திரபிரசாத், சித்த மருத்துவர் கலைவாணி வட்டார கல்வி அலுவலர் நந்தாபாய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பள்ளி மாணவ மாணவியர் அனைவருக்கும் பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கப் பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் செய்திருந்தார்.
அவர் தொடர்ந்து பேசும் போது இப்பள்ளியில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக வனமகோத்சவ விழா சிறப்பாக கொண்ட்டாடப்பட்டு வருகிறது. இதுவரை பதினைந்தாயிரம் மரக்கன்றுகளும், ஐயாயிரம் விதைப்பந்துகளும் இப்பள்ளி வழங்கியுள்ளது.
வன மகோத்சவம்
வன மகோத்சவம் (Van Mahotsav) என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் சூலை முதல் வாரத்தில் கொண்டாடப்படும் ஒரு வார மரம் நடும் திருவிழாவாகும்.
முதல் இந்திய தேசிய மரம் நடும் வாரம் 1947 சூலை 20 முதல் 27 வரை பஞ்சாபி அரசு ஊழியரும், தாவரவியலாளரும், வரலாற்றாசிரியருமான மொகிந்தர் சிங் ரந்தவா என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டது
1947ஆம் ஆண்டு சூலை 20 ஆம் தேதி முதல் நிகழ்வானது காலை தில்லியின் ஆணையர் குர்சித் அகமத் கான் அவர்களால் ஆத்தி மரக்கன்றுகள் நடப்பட்டது. மதியம், இடைக்கால அரசின் துணைத் தலைவர் நேரு தலைமையில் புராண கிலாவில் மற்றொரு விழா நடைபெற்றது. மற்றொரு நாள் "லேடீஸ் டே" என்று அழைக்கப்படும் நாளில் மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி உட்பட பலருடன் குதுப்மினார் வளாகத்தில் நடவுகளில் ஈடுபட்டார்.[1] 1950 ஆம் ஆண்டு உணவு மற்றும் வேளாண்மை அமைச்சர் கே.எம் முன்ஷி என்பவரால் தொடரப்பட்டு தேசிய நடவடிக்கையாக மாற்றப்பட்டது.
No comments
Thank you for your comments