சாலை பள்ளத்தால் நேர்ந்த விபத்து... லாரியில் சிக்கி பெண் பலி...
வெளியூரில் துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய தனது கணவரை அழைத்து வர இருசக்கர வாகனத்தில் சென்ற மனைவி சாலை விபத்தில் பலியான சோகம்...
இவ்விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஏகாம்பரபுரம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமேஸ்வரி வயது(37) என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டத்திலுள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுவிட்டு ஆறுமுகம் இன்று அதிகாலை காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
இதனையடுத்து தனது கணவர் ஆறுமுகத்தை அழைத்து செல்ல அவரது மனைவி பரமேஸ்வரி தனது இருசக்கர வாகனத்தில் மாநகராட்சி அலுவலகம் அருகே அன்னை இந்திரா காந்தி சாலை வழியாக சென்றுக்கொண்டிருந்த போது சாலையில் இருந்த புதைவடிகால் இணைப்பு பள்ளத்தினை தவிர்ப்பதற்காக வலது பக்கமாக தனது இரு சக்கர வாகனத்தை சற்று வளைத்துச் சென்றபோது சற்றும் எதிர்பாராத விதமாக இவரது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பரமேஸ்வரி உடல் நசுங்கி பரிதாபமாக பலியானர்.
இதையடுத்து இவ்விபத்து குறித்து தகவலறிந்த சிவகாஞ்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரிதாபமாக உமிழ்ந்த பரமேஸ்வரின் சடலத்தை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த்குமார் (37) என்பவரை கைது செய்து லாரியினையும் பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டுனரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது இவ்விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments
Thank you for your comments