தாமல் ஊராட்சி பணிகளை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் நேரில் ஆய்வு
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தாமல் ஊராட்சியில் புதிய சாலை அமைக்கும் பணியை தொடக்கி வைத்து புதிய கழிவுநீர் வடிகால் கால்வாய் நடைபெற்று வரும் பணியை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்களுடன் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் திருமதி.நித்யா சுகுமார் மற்றும் மாவட்ட பிரதிநிதி திரு.எம்.எஸ்.சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர் திருமதி.மலர்கொடி குமார்,வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.பி.எம்.குமார்,ஒன்றிய துணை செயலாளர் திரு.தாமல் ராஜா,ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி.மோகனா இளஞ்செழியன்,ஊராட்சி மன்ற தலைவர்,துணை தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்,கழகத்தினர் உடனிருந்து சிறப்பித்தனர்.
No comments
Thank you for your comments