Breaking News

மஞ்சப்பை என்ற பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் மீண்டும் மஞ்சப்பை என்ற பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து தப்பாட்டாம் ஆடியும், கிளி ஜோசியம் கூறியும், கரகாட்டம் ஆடியும், மஞ்சள் பைகளை வழங்கியும் நூதன முறையில் பொதுமக்களுக்கு கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நடன கலைஞர்கள், கடைகூத்து கலைஞர்கள், கிராம இசை கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக கைவிடுத்து மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டி  பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.



அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில்  மீண்டும் மஞ்சப்பை என்ற பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பகுதியிலுள்ள 16 கால் மண்டபம் அருகே  நடைபெற்றது.

இதில் தப்பாட்டக் கலைஞர்கள் தப்பாட்டம் ஆடியும், நடன குழுவினர்கள் கிளி வேடம் அணிந்துக் கொண்டு கிளி ஜோசியம் கூறியும், கரகாட்டம் கலைஞர்கள் கரகாட்டம் ஆடியும்  ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பைகளை முற்றிலுமாக ஒழித்து மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்தி மாநகராட்சியின் சுற்றுச்சூழலை பேணி காக்க வேண்டும் என கலை நிகழ்ச்சிகளின் வாயிலாக நூதன முறையில் பொது மக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

மேலும் மாநகராட்சி மேயர் தலைமையில் அனைவரும் பிளாஸ்டிக் உறுதி மொழி ஏற்றுக்கொண்டப்பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் நாராயணன்,மாமன்ற உறுப்பினர்கள் , மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், ஊழியர்கள் ,பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

No comments

Thank you for your comments