Breaking News

பாரத பிரதமரின் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் ரூ.10,00,000/-க்கு அஞ்சலக சேமிப்பு புத்தகம், ரூ.5,00,000/-க்கு மருத்துவ காப்பீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாரத பிரதமரின் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 9 குழந்தைகளுக்கு ரூ.10,00,000/-க்கு அஞ்சலக சேமிப்பு புத்தகம், ரூ.5,00,000/-க்கு மருத்துவ காப்பீடு, பாரத பிரதமரின் வாழ்த்து மடல் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

பாரத பிரதமரின் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின் மூலம் ரூ.10,00,000/-க்கு அஞ்சலக சேமிப்பு புத்தகம், ரூ.5,00,000/-க்கு மருத்துவ காப்பீடு, பாரத பிரதமரின் வாழ்த்து மடல் மற்றும் சான்றிதழ்களை காணொலி காட்சி வாயிலாக மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, அனைத்து மாநில குழந்தைகள் மற்றும் அலுவலர்களிடம் திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் மாண்புமிகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேம்பாட்டு துறை அமைச்சர் திருமதி.ஸ்மிருதி சுபின் இராணி அவர்கள் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாரத பிரதமரின் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின் மூலம் ரூ.10,00,000/-க்கு அஞ்சலக சேமிப்பு புத்தகம், ரூ.5,00,000/-க்கு மருத்துவ காப்பீடு, பாரத பிரதமரின் வாழ்த்து மடல் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.சூரியகலா, குழந்தை நல குழு தலைவர் மற்றும் உறுப்பினர், இளைஞர் நீதி குழு உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments