Breaking News

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் 2022 ம்  ஆண்டு மே மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி வருகின்ற 13.05.2022 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர்.  அதேசமயம் பட்டதாரிகள் (BE.உட்பட), டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12 வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள், செவிலியர்கள்,  மருந்தாளுர் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.


வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 13.05.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments