மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.. 345 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (09.05.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 345 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் வட்டம் உள்ளாவூர் கிராமத்தைச் சேர்ந்த எட்டு நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்களால் வழங்கப்பட்டது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்க உதவி செய்ய அனைத்து உதவிகளும் தமிழகம் சார்பாக அனைத்து உதவிகளும் செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் தாராளமாக நிதியுதவி அளிக்க கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ச.லஷ்மிபிரியா, த.பெ.சங்கர் தனது சேமிப்பு நிதியிலிருந்து ரூ.3000/- எடுத்து காசோலையாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்களிடம் தனது தந்தையுடன் வந்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சிவ ருத்ரய்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments