Breaking News

ஊராட்சி தலைவரை குறிவைத்து நடக்கும் வழக்குபதிவு.... பல திடுக்கடும் தகவல் வெளிவரும்!

ஊராட்சி தலைவரை குறிவைத்து நடக்கும் வழக்குபதிவு....  உள்ளாட்சி துறை அலுவலர்கள், அதிகாரிகளிடம் உரிய விசாரணை செய்தால் பல திடுக்கடும் தகவல் வெளிவரும்!  தொருவளூர் பொது மக்கள் பகிரங்கம்...

ராமநாதபுரம், மே 13-

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சியில் நல்லாட்சி செய்த தலைவர் மீது பொய் வழக்கு பதிவு செய்தது குறித்து ஊராட்சி செயலாளர் முதல் உள்ளாட்சி துறை அதிகாரிகள் வரை உரிய முறையில் விசாரணை மேற்கொண்டால் உண்மை நிலவரம் தெரியவரும் என கிராம மக்கள் தெளிவுபட கூறுகின்றனர்.



இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஒன்றியம் தொருவளூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்ட அரசிடமிருந்து முறைப்படி உத்தரவு கிடைக்கப் பெற்றது. 


இந்த உத்தரவின் அடிப்படையில் கட்டிடம் கட்டுவதற்காக ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு மேற்படி கட்டிடத்திற்கான மணலை பெறுவதற்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பத்தில் கடந்த 23.12.2020 செயல்முறை ஆணைகள் படி நொச்சியூரணியிலிருந்து  எடுத்துக் கொள்ள வழிவகை செய்தார். இதன்படி கட்டிடம் தேவை படுவதற்கு தேவையான மணலை மேற்படி இடத்தில் இருந்து ஒரு வருடத்திற்கு முன்னரே தேவையான அளவு எடுக்கப்பட்டு கட்டிடம் கட்ட இடத்தில் பாதுகாக்க வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் குவிக்கப்பட்டிருந்த மணலை காரணம் காண்பித்து வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் சேர்ந்து உண்மைக்குப் புறம்பாக கடந்த 26.4.2022 தேதியன்று மணல் கடத்தப்பட்டதாக ஒரு பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்கனவே உத்தரவிட்டு அதன்படி சேகரிக்கப்பட்ட மணலை திட்டமிட்டு சிலரின் தூண்டுதலால் இப்படி ஒரு தவறான பொய் வழக்கை பதிவு செய்துள்ளனர்.

ஊராட்சி நலன்கருதி செயல்படும் ஊராட்சித் தலைவர் பஜ்ருதின் மீது பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து ஊராட்சியில் வசிக்கும் ஒட்டுமொத்த பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் வழக்கு பதிவை ரத்து செய்ய குரல் எழுப்பினர். 

அத்துடன் ஊராட்சி பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமநாதபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் அலுவலகத்தில் திரளாக சென்று உண்மையை விளக்கி கூறியும் உண்மைக்குப் புறம்பாக பொய் வழக்கு நீடிக்கிறது.

வழக்கின் உண்மை நிலவரம் அறிவதற்கு விசாரணை அதிகாரி தொருவளூர் ஊராட்சி செயலாளர், விஏஒ, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் என அரசு தரப்பில் உள்ள அரசு அலுவலர்கள், அதிகாரிகளில் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டால் ஊராட்சி தலைவர் மீது எவ்வித தவறும் இல்லை என ஒட்டுமொத்தமாக குரல் கொடுப்பர் என்பதே தொருவளூர் ஊராட்சி மக்களின் ஒட்டுமொத்த பதிலாக உள்ளது. உள்ளாட்சியில் நல்லாடி நடத்திய ஊராட்சி தலைவர் மீது தொடர்ந்து வழக்குபதிவு செய்வதால் மக்கள் பணி செய்வதில் தொய்வுநிலை நீடிக்கிறது. 

இதுகுறித்து காவல்துறை இயக்குனர், தலைமை செயலாளர் ஆகியோர் உரியமுறையில் நடவடிக்கை எடுத்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் எனவும் மக்கள் கூறுகின்றனர். 

ஊராட்சி தலைவருக்கு அடுத்து அடுத்து இடையூறு தரும் வகையில் சிலர் செயல்பட்டு கொண்டு காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரை துாண்டி விட்டு தவறான வழியில் கொண்டு செல்வது உண்மையை கேலி கூத்தாக்குகிறது. 

தமிழக முதலமைச்சர், உள்ளாட்சிதுறை அமைச்சர் ஆகியோர் மக்கள் பணி செய்வோருக்கு இடையூறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments

Thank you for your comments