TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி பெற அழைப்பு - மாவட்ட ஆட்சியர்
கோவை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் TNPSC GROUP -IV தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. VAO, Junior Assistant, Typist, Bill Collector, Steno Typist, என மொத்தம் - 7301 பணிக்காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இத்தேர்விற்கு www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக 28.04.2022 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு நாள். 24.07.2022. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் ஏப்ரல் மாதத்திலிருந்து வார இறுதி நாட்களில் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) நேரிடையாக பயிற்சி வகுப்பு துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 04.04.2022 அன்று திங்கட்கிழமை மதியம் 3.00 மணியளவில் அறிமுக வகுப்பு நடைபெறும். மனுதாரர்கள் TNPSC தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பப் படிவத்துடன் இந்த அறிமுக வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பிற்கு தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த இலவச பயிற்சி வகுப்பில், பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன் குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வில் தேர்ச்சி பெற அனைத்து வழிவகைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் இத்தேர்விற்கான பாடக்குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்வையிட்டு தேவைப்படும் தகவல்களை திரட்டி தேர்விற்கு தயார் செய்து கொள்ளலாம்.
போட்டித்தேர்வு எழுதி அரசு வேலைவாய்ப்பு பெற விரும்புவோர் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் அவர்கள் தெரிவித்துள்ளர்.
No comments
Thank you for your comments