Breaking News

ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் நேரடி கலந்தாய்வு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனைத்து மாவட்ட அலுவலகங்கள்,  மண்டல அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகம் ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும்     நேரடி கலந்தாய்வு அமர்வுகளை நடத்தப்படுகிறது.

தொழிற்சாலைகளுக்கு இசைவாணை வழங்குதல் மற்றும் அவற்றை கண்காணித்தல் மற்றும் மாசு தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்தல் ஆகியவை வாரியத்தின் சில முக்கியமான செயல்பாடுகளாகும். 

இந்த செயல்பாடுகளில் பெரும்பாலானவை கடந்த சில ஆண்டுகளில் இணையவழி மூலமாக செயல்படுத்தப்படுவதால் பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோருடன் நேரடி கலந்துரையாடல் மிகவும் குறைந்துள்ளது. 



வாரியத்தின் அதிநவீன இணைவழி வசதிகள் விண்ணப்பம் / மனுவின் நிலையை அவ்வப்போது தெரிவித்தாலும், நேரடி கலந்துரையாடல் மூலம் மட்டுமே பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோருடன் புரிதல் மற்றும் அதிக நம்பிக்கையை உருவாக்க முடியும்.

எனவே, தொழிற்சாலைகள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றுடன் நேரடி கலந்துரையாடல்களை எளிதாக்குவதற்கும், வாரியத்தின் செயல்பாடுகளை மிகவும் வெளிப்படையான மற்றம் நம்பகமான முறையில் செயல்படுத்துவதற்கும், வாரியம் “நேரடி கலந்தாய்வு அமர்வு” (OPEN HOUSE SESSION) நடத்த முன்வந்துள்ளது. 

தனிநபர் / தொழிற்சாலைகள் / தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் / பொது நலச் சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க / சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள / மாசு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இசைவாணைகள் குறித்து புகார் செய்ய மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகள் / கருத்துகளை தெரிவிக்க இந்த அமர்வில் பங்கேற்று சம்பந்தப்பட்ட வாரிய அதிகாரிகளை சந்திக்கலாம்.

நேரடி கலந்தாய்வில் அமர்வு ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி காலை 11 மணியளவில் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும், அனைத்து மண்டல அலுவலகங்களிலும் மற்றும் வாரியத்தின் தலைமை அலுவலகங்களிலும் நடைபெறும். 5 ஆம் தேதி விடுமுறையாக இருப்பின், அடுத்த வேலை நாளில் நடைபெறும்.

மேலே கூறப்பட்ட நோக்கத்திற்காக வாரியத்தின் எந்த அலுவலகங்களிலும் எந்தவொரு நபரும் முன் தகவல் / அனுமதியும் இல்லாமல் நேரடி கலந்தாய்வு அமர்வில் பங்கேற்கலாம். இருப்பினும், நேரடி கலந்துரையாடலில் கலந்து கொள்ள விரும்புவோர், தங்கள்வருகைக்கு முன்னதாகவே இதற்கான வாரியத்தால் உருவாக்கப்பட்டுள்ள இணையவழி செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. 

இதன் மூலம் வாரிய அதிகாரிகள் பங்கேற்பாளர்களுக்கு நேரடி கலந்துரையாடல் நாளில் அல்லது முடிந்தால் அதற்கு முன்னதாகவும் பதிலளிக்க இயலும். இதற்காக வாரிய இணையதளமான www.tnpcb.gov.in   இல் “OPEN HOUSE” என்ற இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் தங்கள் வருகையின்போது ஆதார் அட்டையை தவறாமல் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதல் நேரடி கலந்தாய்வு அமர்வு 05.04.2022 அன்று வாரியத்தின் அனைத்து அலுவலகங்களிலும் நடைபெறும் மற்றும் பதிவு செய்வதற்கான இணைப்பு 30.03.2022 முதல் வழங்கப்படும்.

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலக முகவரி,  ஈரோடு மாவட்டம்

1. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பிளாட் எண். 815, சிட்கோ தொழில் வளாகம், கல்யாணசுந்தரம் தெரு, சென்னிமலை ரோடு,  ஈரோடு - 638009.

2. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பிளாட் எண். ஜெ-2 (டபிள்யூ), சிப்காட் தொழில் வளர்ச்சி மையம், ஓலப்பாளையம் அஞ்சல்,  பெருந்துறை - 638 052,  ஈரோடு மாவட்டம்.


 

 


No comments

Thank you for your comments