ஈச்சர் லாரி மோதி பெண் காவலர் மற்றும் ஆண் குழந்தை பலி...
காஞ்சிபுரம்:
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி அருகே இருசக்கர வாகனத்தில் கணவனுடன் சென்ற பெண் காவலர் மற்றும் ஆண் குழந்தை, பின்னால் வந்த ஈச்சர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் அருகே சென்னையில் இருந்து பெங்களூர் மார்கமாக சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு சொகுசு கார்களை இடித்து விட்டு பைக்கில் தன் கணவர் ராஜா மற்றும் குழந்தை தர்ஷன் (ஒன்றரை வயது ) ஆகியோருடன் சென்று கொண்டிருந்தனர்.
சிவகாஞ்சி காவல் நிலைய பெண் காவலர் உமாதேவி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உமாதேவி மற்றும் குழந்தை ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தனர்.
உமா தேவியின் கணவர் ராஜா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவ இடத்துக்கு எஸ்பி டாக்டர் எம்.சுதாகர், ஏடிஎஸ்பி ஜெயராமன், டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
வேகமாக வந்த ஈச்சர் லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் காவலர் மற்றும் ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் காவலர் மற்றும் அனைவரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments
Thank you for your comments