காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு தங்கத்தேர் பவனி விழா
காஞ்சிபுரம்:
தமிழ் புத்தாண்டை ஒட்டி பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு தங்கத்தேர் பவனி விழா 4 ராஜவீதிகளில் நடைபெற்றது. இதே போன்று ஆதிகாமாட்சி கோவிலில் காமாட்சி அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா நோய்தோற்று காரணமாக தமிழ் புத்தாண்டு நாட்களில் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வீதிஉலா நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று விதிமுறைகளை முழுமையாக திரும்ப பெற்று வந்த நிலையில் தமிழ் புத்தாண்டு பிறந்தது ஒட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அந்த வகையில் சக்தி தளத்தில் முதன்மையான காமாட்சியம்மன் கோவிலில் சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டன்று ஆண்டுக்கு ஒருமுறை தங்கத்தேரில் காமாட்சியம்மன் பல்வேறு மலர்களால் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க தேரில் எழுந்தருளி கோவிலிலிருந்து வெளிப்பிரகாரம் வந்து நான்கு ராஜவீதி பகுதிகளில் வீதிஉலா வெகு விமர்சியாக நடைபெற்றது.
இந்நிலையில் காமாட்சியம்மன் வழிநெடுக ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். இதேபோன்று ஆதி காமாட்சி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு ஒட்டி இன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
இதனை அடுத்து பல்வேறு மலர்களால் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட லஷ்மி, சரஸ்வதியுடன் ஆதி காமாட்சி அம்மன் பல்லக்கில் எழுந்தருளி நான்கு கால் மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஊஞ்சல் சேவையில் கண்டு மகிழ்ந்தனர்.
No comments
Thank you for your comments