Breaking News

ராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி துறைமுகம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை:  

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இது வரும் மே 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக, நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. விவாதங்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, தொடங்கியுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

அதில், ராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதேபோல், விவசாயிகளை பாதிக்காதபடி நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

வேளாண்தறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபை கேள்வி நேரத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை விரைவில் தனி தாலுக்காவாக செயல்பட தொடங்கும் என்றும் 3  லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதில் அளித்துள்ளார்.

No comments

Thank you for your comments