பிரதமர் மோடியுடன் ஆளுநர் தமிழிசை சந்திப்பு
சென்னை:
புதுவையை பொறுத்த வரை விமானநிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டதால் புதுவை மட்டுமின்றி தமிழகத்தின் 6 மாவட்டங்களும் பயன்பெறும். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது இருமாநில வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் தொடர்பாக விவாதித்து விரிவான அறிக்கையையும் வழங்கி இருக்கிறார்.
புதுவையை பொறுத்த வரை விமானநிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டதால் புதுவை மட்டுமின்றி தமிழகத்தின் 6 மாவட்டங்களும் பயன்பெறும். இதுதவிர சுற்றுலா பயணிகளை கவர புதுவை-காரைக்காலுக்கு இடையே கடல்- விமான போக்குவரத்து தொடங்க வேண்டும். இது தெய்வீக சுற்றுலாவாக மேம்பட வாய்ப்பு இருக்கிறது.
புதுவையில் இருந்து விமான போக்குவரத்து வசதி செய்ய வேண்டும். மூடி கிடக்கும் பஞ்சாலைகளை திறக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் வழங்கி அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய அரசு அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தை செயல்படுத்தியதற்கும், ஹைதராபாத்-புதுச்சேரி-பெங்களூர் விமான சேவையை மீண்டும் தொடங்கியதற்கும் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொணடார்.
No comments
Thank you for your comments