கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் அறிவிப்பு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு 01.07.2015 அன்றுள்ளவாறு விண்ணப்பித்தவர்களுக்கு "காஞ்சிபுரம் இரயில்வே ரோடு, அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் " 27.04.2022, 28.04.2022 மற்றும் 29.04.2022 ஆகிய மூன்று நாட்களுக்கு காலை 09.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் நேர்காணல் நடைபெறவுள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது, அதனில் குறிப்பிட்டுள்ள நாளில், அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகள் மற்றும் நகல்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் பெயர் பட்டியல் www.kancheepuram.nic.in என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நேர்முக அழைப்பாணை கிடைக்கப்பெறாத தகுதியான விண்ணப்பதாரர்கள் அழைப்பாணை கடிதத்தினை 27.04.2022 அன்று காஞ்சிபுரம், ஹாஸ்பிடேல் ரோடு, கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலக வளாகத்தினுள் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அழைப்பாணை கடிதம் இல்லாதவர்கள் நேர்முக தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், நேர்காணலுக்கு கலந்து கொள்பவர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்பட மாட்டாது..
No comments
Thank you for your comments