அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து மோர், இளநீர் வழங்கல்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கூட்ரோடு பகுதியில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும் ஒன்றிய குழு உறுப்பினருமான எஸ்எஸ்ஆர் சத்யா ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல்யினை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் கழக அமைப்புச் செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் திறந்து வைத்து மோர் இளநீர் தர்பூசணி ஆகியவற்றை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.
அருகில் ஒன்றிய செயலாளர் அக்ரி நாகராஜன் , மாமன்ற உறுப்பினர் பிரேம்குமார் உள்ளிட்டோர் உள்ளனர்
No comments
Thank you for your comments