கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க கோரி பாமக ஆர்ப்பாட்டம்
கிடப்பில் போடப்பட்ட தொடர்வண்டித்துறை பணிகளை விரைந்து முடிக்க கோரி காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையம் அருகே பாமக வினர் ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மத்திய அரசால் நிதி வழங்கப்பட்டும் தொடர்வண்டித்துறை கிடப்பில் போட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க கோரி தமிழகம் முழுவதும் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தின் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டச் செயலாளர்கள் பெ. மகேஷ் குமார் , அரிகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது ஸ்ரீபெரும்புதூரில் புதிய ரயில் தடம் அமைக்கப்படுவதாக நிதி ஒதுக்கப்பட்டு பல ஆண்டுகாலமாக இன்னமும் பணி தொடராமல் இருப்பதால் அதனை உடனடியாக விரைந்து முடிக்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் கிடப்பில் போடப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொடர்வண்டி புதிய படத்தினை ஏண்டா விரைந்து முடிக்கக் கோரி காஞ்சிபுரம் ரயில் நிலையம் அதிகாரியிடம் மனு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் உமாபதி, காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காலூர் சங்கர் , காஞ்சிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments