பாரதியார் பல்கலை துணைவேந்தர் காளிராஜ் என்.சி.சி., கவுரவ கர்னலாக தேர்வு
கோவை :
கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் காளிராஜ் என்.சி.சி., கவுரவ கர்னலாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான விழா பாரதியார் பல்கலை வளாகத்தில் நடைபெற்றது.
கோவை குழு, என்.சி.சி., குரூப் கமாண்டர் நாயுடு துணைவேந்தருக்கு கவுரவ கர்னல் பட்டத்தை வழங்கினார்.
கவுரவ கர்னல் விருதின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
விழாவில், தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டிங் அலுவலர் கர்னல் சவுகான், பாரதியார் பல்கலை பதிவாளர் முருகவேல், என்.சி.சி., கம்பெனி கமாண்டர் மேஜர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments
Thank you for your comments