உயிர் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி
கோவை:
உயிர் அமைப்பு சார்பில், சாலை விபத்துகளை தவிர்க்க விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி ஆர்.எஸ்.புரம், கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு ஓவிய கண்காட்சியில், சிறப்பு விருந்தினராக, ஜெர்மனி நாட்டு துாதுவர் வால்டர் லிண்டர் பங்கேற்று பேசுகையில்,
''பள்ளி மாணவர்கள் சாலை விதிமுறைகள் குறித்து தெரிந்திருக்க வேண்டும். விதிமுறைகளை மீறுவதால்தான் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற கண்காட்சிகளில், பெரியோரும் பங்கேற்க வேண்டும். தொடர் விழிப்புணர்வு நிகழ்வுகளால், விபத்து இல்லாத நகரை உருவாக்க முடியும்,'' என்றார்.
இந்நிகழ்ச்சியில், உயிர் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜசேகர், அறங்காவலர் ராமசாமி, ஜெர்மனி நாட்டு துாதரக அலுவலர் தாமஸ் ஸ்ட்ரைடர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments
Thank you for your comments