Breaking News

சமத்துவபுரம் வீடுகளில் பராமரிப்பு பணிகள் குறித்து பயனாளிகளிடம் மதிப்பீடு பணி விளக்கம்...

கோவை :

கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியம் தென்சங்கம்பாளையம் ஊராட்சியில்   கடந்த பல ஆண்டுகளாக சமத்துவபுரம் பராமரிக்கப்படாமல் இருந்த பழுதடைந்து வீடுகள் மற்றும் சமுதாயக்கூடம் கழிப்பிடங்கள் அனைத்தையும் தமிழக முதல்வர் பதவியேற்ற ஒரு வாரத்திலேயே சமத்துவபுரங்கள் எல்லாம் சீரமைக்கப்படும் என்று சொன்னதற்கு இணங்க, மாவட்ட ஆட்சியாளர் திட்ட இயக்குனர் துணை திட்ட இயக்குநர் ஆய்வு செய்தனர். 

இந்நிலையில், சமத்துவபுரம் பகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கு பராமரிப்பு பணிகளுக்காக பயனாளிகளிடம் கேட்டு அறியப்பட்டு. மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் நடைபெற உள்ளதை  பொதுமக்களிடத்தில் பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது  

இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமை பொறியாளர் மற்றும் பொறியாளர் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் அண்ணா மறுமலர்ச்சி நூலகம் மண்புழு உரம் தயாரிக்கும் இடம் மற்றும் தென்சங்கம்பாளையம் ஊராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளில் பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்தனர்.

இதில் ஊராட்சி மன்றத் தலைவர்   எஸ்.ஆர் அண்ணாதுரை ,துணைத் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கோவை தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments