செந்தமிழ்செல்வர்-முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை நினைவு தினம் அனுசரிப்பு...
காஞ்சிபுரம் :
செந்தமிழ்செல்வர்-முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர,கழக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்பு காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கழக நிர்வாகிகள் மற்றும் ஏழை எளிய பொது மக்களுக்கு அறுசுவை உணவுகளையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம்,
மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், மாமன்ற உறுப்பினர்கள்,ஒன்றிய குழு பெருந்தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள்,மாநகர நிர்வாகிகள்மற்றும் சி.வி.எம்.அண்ணாமலை குடும்பத்தார், கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments