Breaking News

சிவகாஞ்சி காவல்நிலைய கட்டடம் திறப்பு

காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சிவகாஞ்சி காவல்நிலைய கட்டடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் பெரிய காஞ்சிபுரத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கி செயல்பட்டு வரும் சிவகாஞ்சி காவல்நிலையமானது 1930-ஆம் கட்டப்பட்டு தேரடி தெரு பகுதியில் இயங்கி வந்தது.

இந்நிலையில் அக்கட்டடமானது மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால் புதிய கட்டடம் கட்டுவதற்கு கோரிக்கை எழுந்தது.புதிய கட்டடம் கட்ட 1.2கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2020 செப் மாதம் 20ஆம் தேதி அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.


இதுவரை அக்காவல்நிலையமானது தற்காலிகமாக காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாக பகுதியிலிருந்த ஊர்காவல் துறை மாவட்ட தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வந்த நிலையில் புதிய கட்டடம் கட்டும் பணியானது நிறைவடைந்து இன்று சிவகாஞ்சி காவல்நிலையத்தினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதனைதொடர்ந்து காஞ்சிபுரம் சரக காவல்துறை துணை தலைவர் சத்யாபிரியா,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் குத்துவிளக்கினை ஏற்றி தொடங்கிவைத்தனர்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜூலியர் சீசர், சிவகாஞ்சி காவல்நிலைய ஆய்வாளர் விநாயகம்,விஷ்ணு காஞ்சி காவல்நிலைய ஆய்வாளர் சுந்தரராஜன் மற்றும் உதவி ஆய்வாளர்கள்,காவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments