கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!
கோவை, ஏப்.12-
மாநகராட்சி சொத்துவரி சீராய்வு செய்வதற்கு மாமன்றத்தில் ஒப்புதல் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே சொத்து வரி ஏற்றப்பட்டுள்ளது என்றனர். இதையடுத்து அ.தி.மு.க.,. கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
கோவை மாநகராட்சி முதல் மாமன்ற சாதாரண கூட்டம் விக்டோரியா கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி கமிஷனர் ராஜ-கோபால் சுன்கரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் கல்பனா தலைமை தாங்கி திருக்குறளை வாசித்து அதன் விளக்கத்தையும் கூறினார்.
பின்னர் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் தங்கள் பகுதி குறைகள் குறித்து பேசினர். கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் பேசுகையில், கோவை மாநகராட்சியில் தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் சாக்கடை பிரச்சி-னைகளுக்கு அ.தி.மு.க.,. அரசுதான் காரணம் என குற்றம் சாட்டினார். மேலும் ஒரு எம்.எல்.ஏ. கூட இதுவரை வார்டுகளுக்கு வந்து பார்க்கவில்லை என்றார்.
அவரின் இந்த பேச்சுக்கு 47-வது வார்டு அ.தி.மு.க.,. கவுன்சிலர் பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது தி.மு.க கவுன்சிலர்கள் அவரை அமைதியாக இருக்கும்படி கூறினர். இதனால் அவர் இருக்கையில் அமர்ந்தார்.
தொடர்ந்து மத்திய மண்டல தலைவர் மீனா லோகு பேசுகையில் குப்பைகளை அள்ள சிறு,சிறு வாகனங்கள் வருகின்றது. இதனால் குப்பை தேக்கம் அடைகிறது. சிறு, சிறு வாகனங்களுக்கு பதிலாக ஒரு டிப்பர் லாரி கொண்டு வந்தால் 4 வாகன-ங்களில் அள்ளக்கூடிய குப்பையானது ஒரே வாகனத்தில் அள்ளி செல்லப்படும்.
மேலும் கவுன்சிலர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. சென்னையில் வார்டு கவுன்சிலர் களுக்கு ரூ.30 லட்சம் வரை நிதி ஒதுக்கப்படுகிறது. அதேபோல் கோவையிலும் ஒதுக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து பேசிய மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் தமிழக அரசின் அரசாணையின்படி கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்கப்படும். உங்களது கோரிக்கை தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்றார்.
47-வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் பிரபாகரன் பேசிய போது கடந்த 10 மாத-ங்களாக மாநகராட்சியில் பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்-படவில்லை என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, அ.தி.மு.க., ஆட்சியில் தான் எந்த பராமரிப்பு பணிகளும் நடக்கவில்லை. கடந்த 10 மாதங்களாக தான் அனைத்து வேலைகளும் நடைபெறுகிறது. திமுக ஆட்சியை மக்கள் வரவேற்றுள்ளனர். தவறான தகவலை தர வேண்டாம் என்றார்.
இதனால் அ.தி.மு.க., கவுன்சிலர் பிரகாரனுக்கும், தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் கவுன்சிலர்களை சமாதானம் செய்தனர்.
தொடந்து கவுன்சிலர்கள் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். குப்பைகள் தேங்காமல் அகற்றப்பட வேண்டும். குப்பைகளை கொண்டு செல்ல புதிய வாகனங்களை வாங்க வேண்டும். சாக்கடைகளில் அடைப்பு இல்லாமல் தூய்மைப்படுத்த வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு போதுமான உபகரணங்களை கொடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் கல்பனா, கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும், என்றார்.
இக்கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் 15 வது ஒன்றிய நிதி ஆணையம் 2022-2023-ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம் பெறுவதற்கு மொத்த ஆண்டு மதிப்பில் சொத்து வரி விகிதம் எவ்வளவு என அறிக்கை வெளியிட வேண்டும். மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொத்து வரி வசூலில் முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்துள்ளது.
தூய்மை இந்தியா திட்டம் 2.0, அம்ரூட் திட்டம் 2.0 ஆகிய திட்டங்களுக்கு நிதி பெறுவதற்கு சொத்துவரி செய்வது அவசியமாகிறது. எனவே மாநகராட்சி சொத்துவரி சீராய்வு செய்வதற்கு மாமன்றத்தில் ஒப்புதல் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே சொத்து வரி ஏற்றப்பட்டுள்ளது என்றனர். இதையடுத்து அ.தி.மு.க.,. கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
No comments
Thank you for your comments