கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில் பட்டா மாறுதல் முகாம்
கோவை:
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் , 52 ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று , தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வழிகாட்டுதலில், கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி, ஆர்.கே.மில்ஸ் வீட்டு உரிமையாளர் நல சங்கம் திருமண மண்டபத்தில், பட்டா மாறுதல் முகாம் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் திருமதி இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் MC தலைமையில் நடைபெற்றது
பட்டா மாறுதல் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்த பொதுமக்களுக்கு பட்டா மாறுதல்களை, கோவை தெற்கு வட்டாட்சியர் சரண்யா,மண்டல துணை வட்டாட்சியர் இளவரசு, செட்டில்மென்ட் வட்டாட்சியர் கல்பனா அலமேலு ஆகியோர் முன்னிலையில், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் திருமதி இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் MC வழங்கினார்.
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் குப்பனூர் பழனிச்சாமி,புதூர் மணிகண்டன், ஆ.கண்ணன், பீளமேடு பகுதிக்கழகம்-1 பொறுப்பாளர் வே. பாலசுப்பிரமணியம், வழக்கறிஞர் விஜயராகவன், வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் தகடூர் செல்வம்,மா.ரவி,நாராயணன், சுந்தர்ராஜன், கோவிந்தராஜ், எஸ்.ரங்கதுரை, ஆர்.செல்வராஜ், சின்னமணி, ஆறுமுகம், முருகேஷ், முத்துப்பாண்டி, நவீன், ரூபேஷ், தினகரன், தகவல் தொழில் நுட்ப அணி ஸ்ரீ ராம், மு.சதீஷ்குமார், அன்சாரி, பரத், பரணீதரன், கதிரவன், சன்ஃபீர், ஜே.எஸ்.ஆர்.ஜெயபால், பிரசன்னா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணமூர்த்தி, மதிமுக வெள்ளிங்கிரி, பயோனிர் தியாகு, மகளிரணி காந்திமதி, விஜயா, அமுதா, வசந்தி, சிவகாமி, சுசீலா டீச்சர், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளான பங்கேற்றனர்.
No comments
Thank you for your comments