திருக்காலிமேடு குப்பை கிடங்கில் தீயை உடனே அணைக்க மேயர் உத்தரவு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே எரியும் குப்பைக் கிடங்கில் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக தொடர்ச்சியாக குப்பை எரிந்து வருகிறது.
தீயை அணைக்காமல் இருந்ததற்காக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.1 கோடியே 33 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி குப்பைக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், எரியும் குப்பையை உடனடியாக அணைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இனிவரும் காலங்களில் குப்பை எரிந்தால் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்கள் பாதிக்கப்படாமல் உடனடியாக தீயை அணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் காஞ்சிபுர மாமன்ற உறுப்பினர்கள் சந்துரு, சுரேஷ், கமலக்கண்ணன், சங்கர், விஸ்வநாதன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் யுவராஜ், ஒன்றிய பொருளாளர் தசரதன் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments