திருப்பெரும்புதூர் ஒன்றியத்தில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள்!..
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் பூவை மூர்த்தியார் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோபிநாத் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.பி.சி தனசேகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக புரட்சி பாரதம் கட்சி நிறுவனர் பூவை ஜெகன் மூர்த்தியார் கலந்துகொண்டு தண்டலம், வளர்புரம், மண்ணுர், செங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கட்சி கொடியேற்றி பூவை மூர்த்தியாரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை, அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் ஒன்றிய பொருளாளர் மண்ணுர் முனுசாமி, சங்கை ராமு, வளர்புரம் குமார், பெரிய வளர்புரம் பிரகாஷ், சுரேஷ், மண்ணுர் முரளி, காந்தி நகர் வேலு, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments