Breaking News

மூன்றாவது மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன் நீர்த்தேக்கத் தொட்டியை நேரில் ஆய்வு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி மூன்றாவது மண்டல குழு தலைவர் திருமதி சாந்தி சீனிவாசன் 32 ஆவது வார்டுக்கு உட்பட்ட ரங்கசாமி குளம் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்தார்.

இதில் நீர்த்தேக்க தொட்டியில் சரியாக தண்ணீர் வராமல் பொதுமக்களுக்கு உபயோகமில்லாமல் உள்ளதால் பொதுமக்கள் புகார் அளித்ததன் பேரில் இன்று ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உடனடியாக இதனை தீர்வு கண்டு உடனே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு அதிகாரிகளுக்கு மூன்றாவது மண்டல குழு தலைவரும் 32வது மன்ற உறுப்பினருமான திருமதி சாந்தி சீனிவாசன் அவர்கள் உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில் நாற்பத்தி 48-வாது மாமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கண்ணன், பொன்னம்பலம் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments