Breaking News

மதுவை அண்ணா ஏற்று கொள்வில்லை... ஆனால்.... நேரடியாகவே சாடிய அன்புமணி ராமதாஸ் ....

காஞ்சிபுரம்:

அனைத்து மாநிலங்களிலும் இரு மொழி கொள்கை மட்டுமே சாத்தியம், உத்திரபிரதேச மாநிலத்தில் இந்தி ஆங்கிலத்தை தவிர தமிழை கொண்டு வர முடியுமா  என்று  அன்புமணிராமதாஸ்  தெரிவித்துள்ளார்.


பாட்டாளி மக்கள் கட்சியின் பாமக 2.0 என புதியயுகம் கொண்டுவரப்பட்டு காஞ்சிபுரம், ஶ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் தொகுதிகளுக்கு புதிய உறுப்பினர்கள் மற்றும் பொறுப்புகள் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. 


பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.

அப்போது கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ்  பேசியதாவது,  

பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் நேர்மையாக இருக்க வேண்டும். பணம் சம்பாதிக்கும் நோக்கம் இருப்பவர்கள் ஒதுங்கி கொள்ளுங்கள், யார் மீதாவது புகார் வந்தால் அவர்கள் மீது கட்சி பொறுப்பில் மற்றும் அடிப்படை உறுப்பினர்கள் இருந்து நீக்கபடுவார்கள். 

10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கண்டிப்பாக கிடைக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றுவார் இல்லையென்றால் பாட்டாளி மக்கள் கட்சியினர் பற்றி தெரியும்? பாமக கட்சியினரிடம் சொல்லியிருக்கிறேன் நிச்சயமாக சட்டம் நிறைவேறும் என்றார்.

மேலும்,  மதுவை அண்ணா ஏற்று கொள்வில்லை அண்ணா பெயர் வைத்து கட்சி நடத்தும் கட்சிகள் மதுவை விற்பனை செய்து வருகின்றனர். 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது நமது நோக்கம் பேரறிஞர்  அண்ணா பிறந்த மண் காஞ்சிபுரம் என நெகிழ்ச்சியாக பேசினார் 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 

உச்ச நீதிமன்றம் வன்னியர்களுக்கு 10.5 % இட ஒதுக்கீடு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது தமிழக அரசும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சாதகமான முடிவு எடுக்கும், மத்திய அரசு தமிழகத்தில் இந்தி தினிப்பு கண்டனத்திற்க்குரியது. 

பாஜக ஆளும் உத்திரபிரதேசத்தில் இந்தி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக தமிழை கொண்டு வர முடியுமா நாட்டில் இரு மொழி கொள்ளை மட்டுமே சாத்தியமாகும், மூன்றாவது மொழி சாத்தியமில்லை என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ. கே. மூர்த்தி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள் உள்ளிட 500க்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments