தமிழகத்தில் 42 எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலி
சென்னை:
தமிழகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டதில் 24 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பவில்லை. கடந்த ஆண்டுவரை அவ்வாறு நிரம்பாத இடங்களை மாநிலங்களுக்கு திருப்பி ஒப்படைக்கும் நடைமுறை இருந்தது.
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்பட மொத்தம் 37 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகளிலும் மற்றும் சுய நிதி மருத்துவ கல்லூரிகளிலும் 7,825 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 2,060 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.
இந்தியா முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இருந்து 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. அதன்படி தமிழகத்தில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 886 இடங்கள் வழங்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கான மூன்று சுற்று கலந்தாய்வையும், சிறப்பு கலந்தாய்வையும் மருத்துவ கலந்தாய்வு குழு சமீபத்தில் நடத்தியது.
அதில் தமிழகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டதில் 24 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பவில்லை. கடந்த ஆண்டுவரை அவ்வாறு நிரம்பாத இடங்களை மாநிலங்களுக்கு திருப்பி ஒப்படைக்கும் நடைமுறை இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு அந்த இடங்களை ஒப்படைக்காமல் மத்திய அரசே அதனை நிரப்பும் வகையிலான கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அதன் விளைவாக தற்போது கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்ட பின்னரும் எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.
இதனால் தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களில் சேரும் வாய்ப்பு 24 மாணவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தனது கொள்கை முடிவை திரும்ப பெற்றுக்கொண்டு அனைத்து மாநிலங்களுக்கும் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையே மாநில மருத்துவ கல்வி இயக்ககம் நடத்திய கலந்தாய்வில் சுய நிதி கல்லூரிகளில் உள்ள 4 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் 14 நிர்வாக இடங்களும் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப கூடுதல் அவகாசம் அளிக்குமாறும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments