காஞ்சிபுரத்தில் திமுகவினர் ஊர்வலமாக சென்று அண்ணல் அம்பேத்கரின் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணல் அம்பேத்கரின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் பழைய ரயில்வே சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தி அவரின் புகழை கோஷமிட்டனர்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், மேயர் மகாலட்சுமி, மாவட்ட அவைத்தலைவர் சேகரன், ஒன்றிய குழுத் தலைவர் மலர்கொடி, ஒன்றிய செயலாளர்கள் குமார், குமணன், முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் முத்துசெல்வம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் செங்குட்டுவன், சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.எஸ்.இராமகிருஷ்ணன், தூசி பாலிடெக்னிக் சசிகுமார், மாநகர அவைத்தலைவர் சந்துரு, துணை செயலாளர் ஜெகன்நாதன், யுவராஜ், செவிலிமேடு மோகன், வேதாச்சலம், தசரதன்,குமரேசன், சுகுமாரன், அபுசாலி, சாட்சி சண்முகசுந்தரம், பவளரசன் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
No comments
Thank you for your comments