Breaking News

தூய்மை பணியாளர்களுக்கு மூன்று சக்கர நடமாடும் வாகனம் வழங்கல்...

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோனேரிகுப்பம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று சக்கர நடமாடும் வாகனத்தை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர்  மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் துவக்கி வைத்து 100 நாள் திட்ட பணிகளின் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் வடக்கு ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி, ஊராட்சி மன்ற தலைவர் சைலேஜா சேகர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராம்பிரசாத், ரவி, ஒன்றிய நிர்வாகிகள் ரமேஷ், தசரதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்...








..

No comments

Thank you for your comments