Breaking News

திமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்


காஞ்சிபுரத்தில் திமுக அரசின் நிதிநிலை அறிக்கையினை விளக்கியும் உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றிக்கு வாக்களித்தோருக்கு நன்றி தெரிவித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

காஞ்சிபுரம் வணிகர் வீதி பகுதியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம் வரவேற்பிலும், மாநில தொண்டரணி அமைப்பாளர் சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் கவிஞர் மனுஷ்யபுத்திரன், தலைமை கழக பேச்சாளர் ஒப்பிலாமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

அப்போது சிறப்புரையாற்றிய கவிஞர் மனுஷ்யபுத்திரன் திமுக அரசின் 10 மாத கால ஆட்சியின் சாதனைகளையும் திமுக அரசின் நிதிநிலை அறிக்கையினை விளக்கியும் உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதற்க்கு உழைத்த கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தும் சிறப்புரையாற்றினார். 

இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் குமார், குமணன், பூபாலன், முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் முத்துசெல்வம், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், மாநகர மண்டல குழு தலைவர்கள் சந்துரு, சசிகலா, மோகன், மாநகர நிர்வாகிகள் ஜெகன்நாதன், சுகுமாரன், குமரேசன், விஸ்வநாதன், சுரேஷ், கார்த்தி, செல்வி, தமிழ்செல்வன், தேன்மொழி, ஜெய்கணேஷ், யுவராஜ், மலர்மன்னன், தேவிகா, நிர்மலா, கீதா, விஜயா, உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments