போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கிய போலிஸார்...
கோவை
கோவை மாவட்டம் அவினாசி சாலை அண்ணா சிலை சிக்னலில் ஹெல்மெட் அணியாமல், வெள்ளை கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்துதல், சிக்னலில் பச்சை, மஞ்சள் விளக்குகளை தாண்டி சிவப்பு விளக்குகள் ஒளிர்ந்த பின்னரும் சிக்னலில் நிற்காமல் வாகனத்தை இயக்குதல், செல்போன் பேசியபடி வாகனம் இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காமல் சென்ற பத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளை பிடித்து சிக்னல் அருகே மரநிழலில் இருக்கை போட்டு அமர வைத்து அவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுரைகளை வழங்கினர்.
No comments
Thank you for your comments