மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாகவுள்ள உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
காஞ்சிபுரம்:
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாகவுள்ள உதவி வரவேற்பாளர் (100% பார்வையற்றவர்களுக்கானது) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாகவுள்ள உதவி வரவேற்பாளர் (100% பார்வையற்றவர்களுக்கானது) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கு ஆதரவற்ற விதவை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் 18 வயது முதல் 42 வயதுக்குள் 100% பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், ஓயர் நாற்காலி பின்னும் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் 100% மாற்றுத்திறனாளிகள் 12.04.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, தெரிவித்துள்ளார்கள்.
No comments
Thank you for your comments