Breaking News

நெகிழி பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் ஆட்சியர் ஆர்த்தி...

காஞ்சிபுரம்;

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் நெகிழி  பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்த ஊக்குவிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி / விற்பனையகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் நெகிழி பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்த ஊக்குவிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி / விற்பனையகத்தை  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி  இன்று (07.04.2022)  திறந்து வைத்து கண்காட்சியை பார்வையிட்டார்.



சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்) பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன. 

இதனை முழுமையாக கண்காணிக்க மாவட்ட அளவிலான பணிக்குழு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள், வணிக வளாகங்கள், துணி கடைகள், மருந்து கடைகள், பல்பொருள் அங்காடிகளில் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து, மேலும் இதை தீவிரமாக கண்காணிக்க மாநகராட்சி/ நகராட்சிகள்/ பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள்/பாக்கெட்டுகள்,  பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன. 

அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள், வணிக வளாகங்கள், துணி கடைகள், மருந்து கடைகள், பல்பொருள் அங்காடிகளில் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து, அதற்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக இன்று (07.04.2022) மற்றும் நாளை (08.04.2022) இரண்டு நாட்களுக்கு தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களுக்கு மாற்றுப் பொட்களாக பயன்படுத்தப்படும் வாழையிலை, பாக்குமர இலை, காகித சுருள், கண்ணாடி/உலோகத்தால் ஆன குவளைகள், காகித உறிஞ்சு குழாய்கள், காகித / துணி கொடிகள் உணவு தேக்கரண்டிகள், அலுமினியத்தாள், தாமரை இலை, மூங்கில் / மரம் மண் பொருட்கள், துணி / காகிதம் / சணல் பைகள், பீங்கான் பாத்திரங்கள், மண் குவளைகள் ஆகியவைகளை பயன்படுத்த ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி / விற்பனையகத்தை பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்கள் திரளானோர் பார்வையிட்டு நெகிழி பொருட்களுக்கான மாற்று பொருட்களை பயன்படுத்தி நெகிழி பொருட்களை மாவட்டத்தில் முழுமையாக ஒழித்திட ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ம.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை ஆ,மனோகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்  பி.ஸ்ரீதேவி, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், ஆணையர் பா.நாராயணன், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments