2022 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காஞ்சிபுரம் மாவட்டம் 2022 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு பெற காஞ்சிபுரம் மாவட்டத்தினை சார்ந்த தனி நபர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்...
இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், நமது நாட்டிற்கு பெருமை தேடித் தரும் வகையில் மகாத்மா காந்தி வழியினை பின்பற்றி தொண்டு புரிந்து வரும் தனி நபர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு காந்தி அமைதி பரிசு வழங்கி வருகிறது.
அதன்படி இந்திய அரசின் சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்த செய்தியினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தெரிவிக்கையில்,
மகாத்மா காந்தி அவர்களின் கொள்கைகளை நினைவு கூறும் வகையில் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவதற்காக காந்தி அமைதிப் பரிசு வழங்கப்படுகிறது. இந்த விருது பதக்கம், பாராட்டுச் சான்று மற்றும் ரொக்கத் தொகை ரூ. 1.00 கோடி ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.
விருதுக்கான தேர்வு பிரதம மந்திரியை தலைவராக கொண்டு அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த விருது தனி நபருக்கு மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு சமூக பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களுக்கு அகிம்சை முறையில் பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் காந்திய வழியில் மனித துயரங்களை அகற்றுவதற்கும் முக்கியமாக சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவை சார்ந்த மக்களுக்கும் சமூக நீதி மற்றும் இணைக்கமான நிலையை ஏற்றுபடுத்துபவர்களுக்கும், தேசிய, இனம், மொழி, சாதி, பாலினம் போன்ற சேவைகள் செய்தவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்விருதிற்கான விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்களை www.indiaculture.nic.in என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதியுள்ள தனிநபர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் 12.04.2022 ஆம் தேதிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களிடம் சமர்பிக்க வேண்டும் மேலும், விவரங்களுக்கு 7401703481 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments