அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்
தருமபுரி, மார்ச் 8-
குடிநீர், சாலை வசதி இன்றி பல ஆண்டுகளாக தவிக்கும் கஸ்தூரி கோம்பை கிராம மக்கள் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள கம்மம் பட்டி ஊராட்சி மாவட்டத்தில் கடைசி எல்லை பகுதியில் அமைந்துள்ளது. மேலும் கம்மம்பட்டி ஊராட்சிக்கு தருமபுரி மாவட்டத்திலிருந்து இதுநாள்வரை நேரடி சாலை போக்குவரத்து இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதியுறுகின்றனர்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையில் கைகாட்டி வெள்ளார் பகுதிக்கு சென்று அங்கிருந்து தான் கம்மம்பட்டிக்கு செல்ல முடியும். போக்குவரத்து வசதிகளும் இவ்வாறு இருக்க அந்த ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள கிராம பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதி மக்கள் அதிகளவில் ஆடு, மாடு மேய்த்தல் மற்றும் விவசாயம் உள்ளிட்டவையே பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
கம்மம்பட்டி ஊராட்சியில் கஸ்தூரி கொம்பை, கோம்பை காட்டுவளவு, மழையூர் காடு, உள்ளிட்ட பகுதிகள் மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் எந்த ஒரு திட்டமும் அப்பகுதி மக்களை சென்றடைவதில்லை. மேலும் அடிப்படை வசதிகளான குடிநீர், தார் சாலை, மின் விளக்குகள் உள்ளிட்ட அனைத்திற்கும் இது நாள் வரை கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
பேருந்து வசதிக்கும் சேலம் மாவட்டத்தையே சார்ந்து இருக்க வேண்டியதாக உள்ளது. கஸ்தூரி கோம்பை மற்றும் காட்டுவளவு பகுதியில் சுமார் 50&க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அல்லது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுநாள் வரை அவர்கள் கோரிக்கை எதுவும் செயல்படுத்தபடாததால் மனிதர்கள் முதல் கால்நடைகள் வரை அனைவருக்கும் குடிநீர் தேவைக்காக டிராக்டர்கள் மற்றும் வாகனங்கள் மூலம் பணம் கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். கோடை காலங்கள் துவங்குவதற்கு முன்பே இந்த நிலை என்றால் வரும் மாதங்களில் என்னவாகும் என்று தெரியவில்லை என கவலைப்படுகின்றனர்.
மேலும் மத்திய அரசு அறிவித்துள்ள ஜல் ஜீவன் திட்டம் மூலம் அனைவருக்கும் குடிநீர் மற்றும் தனிநபர் கழிப்பறை உள்ளிட்ட திட்டங்கள் இதுவரை ஒருவருக்கு கூட வழங்கபடவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
மத்திய மாநில அரசுகளின் திட்டங்களுக்கு விண்ணப்பங்களை பலமுறை துறை சார்ந்த அலுவலகங்களில் கொடுத்தும் இதுவரை எந்த ஒரு திட்டமும் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ளதால் வழங்குவதில்லை. மலையூர் காடு, செங்காங்காடு, கஸ்தூரி கோம்பை, உள்ளிட்ட பகுதியில் இருந்து தொப்பூர் அரசு மருத்துவமனை 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நேரடி பேருந்து வசதியும் இல்லாததால் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக செல்ல முடியாத சூழல் உள்ளது.
மேலும் தற்போது இருக்கும் சூழ்நிலையில் குடிநீர் தேவையை உடனடியாக பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். சாலை மற்றும் மத்திய அரசின் திட்டமான தனிநபர் கழிப்பறை உள்ளிட்ட திட்டங்களையும் இப்பகுதி மக்களுக்கு வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கின்றனர். அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்த கம்மம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து கஸ்தூரி கோம்பை பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர். தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பாக பரிகம் பகுதியில் இருந்து கம்மம்பட்டியின் மழையூர் காடு பகுதிக்கு சாலை அமைப்பதற்காக வனப் பகுதியில் நில அளவீடு நடைபெற்று நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் மட்டும் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments