புதிய வளர்ச்சித்திட்டப்பணிகளை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர்‌ சு.முத்துசாமி

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில்  ஜம்பை, நம்பியூர்‌ மற்றும்‌ கூகலூர்‌  ஆகிய பேரூராட்சி பகுதிகளில்‌  புதிய வளர்ச்சித்திட்டப்பணிகளை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை அமைச்சர்‌ சு.முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு மாவட்டம்‌, ஜம்பை மற்றும்‌ நம்பியூர்‌ ஆகிய பேரூராட்சி பகுதிகளில்‌ ரூ.5.50 கோடி மதிப்பீட்டில்‌ புதிய  வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்து, கூகலூர்‌ பேரூராட்சியில்‌ 567 பயனாளிகளுக்கு ரூ.84.78 இலட்சம்‌ மதிப்பிட்டில்‌  பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை  15.03.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி  தலைமையில்‌, அந்தியூர்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ ஏ.ஜி.வெங்கடாசலம்‌  முன்னிலையில்‌,  வீட்டுவசதி மற்றும்‌ நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்‌ சு.முத்துசாமி அவர்கள்‌  வழங்கினார்‌.

இந்நிகழ்ச்சியில்‌,  அமைச்சர்‌  சு.முத்துசாமி அவர்கள்‌ ஜம்பை பேரூராட்சியில்‌ தமிழ்நாடு நகர்புற வேலைவாய்ப்பு திட்டம்‌ 2021-2022-ன்‌ கீழ்‌ துரசம்பாளையம்‌ குளம்‌ ரூ.18.00 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, நல்லிபாளையம்‌ குளம்‌ ரூ.20.00 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, நத்தக்காடு குளம்‌ ரூ.11.00 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌ மற்றும்‌ கருக்குப்பாளையம்‌ குளம்‌ ரூ.10.00 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌ என ரூ.59.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ குளங்கள்‌ தூர்வாரும்‌ பணியினையும்‌, மற்றும்‌ ஜம்பை ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்‌ ரூ.16.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ மழைநீர்‌ வடிகால்‌ அமைக்கும்‌ பணியினையும்‌, தொடர்ந்து, ஜம்பை பேரூராட்சிக்குட்பட்ட நல்லிபாளையம்‌ பகுதியில்‌ 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின்கீழ்‌ ரூ.15 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌, சுமார்‌ 60,000 லிட்டர்‌ கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்‌ தேக்க தொட்டி அமைக்கும்‌ பணியினையும்‌ துவக்கி வைத்து, பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டுவர வேண்டும்‌ என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

தொடர்ந்து, கூகலூர்‌ பேரூராட்சிக்குட்பட்ட தனியார்‌ திருமண மண்டபத்தில்‌ நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள்‌ வழங்கும்‌ விழாவில்‌ வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறையின்‌ சார்பில்‌ 524 பயனாளிகளுக்கு ரூ.66,36,865/- மதிப்பீட்டில்‌ பயிர்காப்பீட்டு திட்டத்தின்‌ கீழ்‌ இழப்பீட்டு தொகையினையும்‌, 5 பயனாளிகளுக்கு ரூ.15,500/- மதிப்பீட்டில்‌ வேளாண்‌ உபகரணங்களையும்‌, தோட்டக்கலைத் துறையின்‌ சார்பில்‌ 4 பயனாளிகளுக்கு ரூ.57,600/- மதிப்பீட்டில்‌ வேளாண்‌ உபகரணங்களையும்‌, கூட்டுறவுத்துறையின்‌ சார்பில்‌ 17 பயனாளிகளுக்கு ரூ.15,60,000,- மதிப்பீட்டில்‌ கறவை மாடுகள்‌ மற்றும்‌ காப்பீட்டு தொகையினையிம்‌, வருவாய்த்துறையின்‌ சார்பில்‌ 17 பயனாளிகளுக்கு ரூ.2.40 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ முதியோர்‌ உதவித்தொகையினையும்‌ என மொத்தம்‌ 567 பயனாளிகளுக்கு ரூ.84,78,965/- மதிப்பீட்டில்‌ பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌.

மேலும்‌, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகம்‌ சார்பில்‌கருணை அடிப்படையில்‌ 3 நபர்களுக்கு பணி நியமன ஆணையினையும்‌ வழங்கினார்‌. 

தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்களை பெற்றுக்‌ கொண்டு,  தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தமிழக மக்களின்‌ வாழ்வு மேம்பாட்டிற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள்‌. 

குறிப்பாக மகளிருக்கு நகர பேருந்துகளில்‌ இலவச பயண திட்டம்‌, இல்லம்‌ தேடி மருத்துவம்‌ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  மேலும்‌, ஈரோடு மாவட்டத்தில்‌ வளர்ச்சிக்காக ஏறத்தாழ 85 திட்டங்கள்‌ செயல்படுத்தப்படவுள்ளது என தெரிவித்தார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, நம்பியூர்‌ பேரூராட்சிக்குட்பட்டட வாரசந்தை வளாகத்தில்‌ கலைஞர்‌ நகர்புற மேம்பாட்டுத்‌ திட்டம்‌ 2021-2022-ன்‌ கீழ்‌ ரூ.4.60 கோடி மதிப்பீட்டில்‌ வாரச்சந்தை மேம்பாடு செய்தல்‌ மற்றும்‌ வணிக வளாகம்‌ கட்டுதல்‌ ஆகிய பணிகளையும்‌ தொடங்கி வைத்தார்‌.

இந்நிகழ்ச்சிகளில்‌, கோபிசெட்டிபாளையம்‌ வருவாய்‌ கோட்டாட்சியர்‌ பழனிதேவி, இணை இயக்குநர்‌ (வேளாண்மை) சின்னசாமி, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (வேளாண்மை) முருசேன்‌, உதவி இயக்குநர்‌ (பேரூராட்சி) வெங்கடேஷ்‌, உதவி செயற்பொறியாளர்‌  கணேசன்‌, பேரூராட்சி தலைவர்கள்‌ என்‌.ஆனந்த குமார்‌ (ஜம்பை),  மா.ஜெயலட்சுமி (கூகலூர்‌), ப.செந்தில்குமார்‌ (நம்பியூர்‌), பேரூராட்சிகளின்‌ செயல்‌ அலுவலர்கள்‌ உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள்‌ மற்றும்‌ தொடர்புடைய துறை அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

No comments

Thank you for your comments