Breaking News

அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் மரத்தடியில் படிக்கும் அவலநிலை

திருவள்ளூர், மார்ச் 16-

திருவள்ளூர் மாவட்டம் சென்னைக்கு அருகாமையில் உள்ள வெங்கல் பகுதியில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் மரத்தடியில் படிக்கும் அவலநிலை அரங்கேறி வருகிறது... 

திருவள்ளூர் மாவட்டம் சென்னைக்கு அருகாமையில் உள்ள வெங்கல் பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது.  இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 850 மாணவ மணவிகள் படிக்கின்றனர். தமிழகத்தில் தற்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவ& மாணவிகள் தமிழகத்தில் முதன்மை இடத்தில் பெற்று வருகின்றன. இதனால் அரசுக்கு நற்பெயரும் ஏற்பட்டிருக்கிறது. 

ஆனால் தற்போது வெங்கல் பகுதியில் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள பள்ளியில் கட்டடம் சரிவர இல்லாததால் பள்ளி மாணவ மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர். பாதுகாப்பின்று உள்ள கட்டடத்தால் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மிகவும் வேதனையில் உள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் மண் தரையில் அமர்ந்து படிக்கும்போது காற்றடிக்கும் நேரங்களில் அவர்கள் மேல் தூசி படிந்து பள்ளி சீருடை முழுவதும் சேதம் அடைந்து விடுகிறது, கண்களில் தூசி விழுந்து பிள்ளைகள் மிகவும் அவதியுறுகின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

மழைக்காலத்தில் பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. வெயில் காலங்களில் குழந்தைகள்  உடல் உஷ்னத்தால் அவதிபடுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.  இந்த அவல நிலை நீடிக்கிறது...

இதுகுறித்து, கடந்த ஆட்சியில் பல முறை சட்டமன்ற உறுப்பினரிடம் புகார் அளித்தும் பயன் இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் விடியல் தரும் அரசாக முழுவதுமாக வேலை செய்துகொண்டிருந்த அரசு, தற்போது அமைதியாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பள்ளியை பற்றி பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினரிடமும் பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசரிடம் பலமுறை புகார் அளித்தும் செவிசாய்க்கவில்லை என்று பொதுமக்கள் புலம்புகின்றனர்.

இதனால் அப்பகுதி உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கடன்களை வாங்கி தனியார் பள்ளியில் சேர்க்கும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

அந்த பகுதி மக்களை கடன் இல்லாமல் வாழ அரசு பள்ளியை தரம் உயர்த்தி அப்பள்ளி மாணவ மாணவிகளை சிறந்தமுறையில் பள்ளியில் பயில முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்திரவிட வேண்டும் என்றும், பள்ளிகல்வி துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை... விடியல் அரசு விடியல் தருமா... என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

No comments

Thank you for your comments