Breaking News

இடையர்பாளையம் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற திட்டம்

கோவை மாவட்டம் இடையர்பாளையம் சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற, நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கோவையில், அதிவேகமாக வளர்ந்து வரும் பகுதியாக, வடவள்ளி மற்றும் இடையர்பாளையம் உள்ளது. வடவள்ளி - இடையர்பாளையம் பகுதியில் ஏராளமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

இவ்வழித்தடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, சாலையை விரிவுபடுத்தி, நான்கு வழியாக்க, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இடையர்பாளையம் முதல் வடவள்ளி வரையுள்ள, 3.8 கி.மீ., சாலையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்காக, 18 கோடி ரூபாய் மதிப்பில், 1 கி.மீ., துாரத்துக்கு நான்கு வழிச்சாலையாகவும், மீதமுள்ள, 2.8 கி.மீ., சாலையை, 10 மீட்டர் வரை விரிவுபடுத்தப்பட உள்ளது. சாலையோரத்தில் வடிகால்வாயும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணி விரைவில் துவங்கப்படும்' என்றார்.

No comments

Thank you for your comments