Breaking News

வெயிலில் நின்று பணிபுரியும் போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம், நீர் மோர் வழங்கல்

கோவை:

கோவை மகளிர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பெண்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

கோவை அண்ணாசிலை சிக்னல் பகுதியில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் பெண் போலீசாருடன் இணைந்து கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடினார். 

அதனைத்தொடர்ந்து   தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள சூழலில் வெயிலில் நின்று பணிபுரியும் போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம், நீர் மோர் ,ஆகியவற்றை வழங்கினார்.  

இந்நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் உமா, செந்தில்குமார் மற்றும் போக்குவரத்து உதவி கமிஷனர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments