Breaking News

பெண் காவல் அதிகாரிகளுக்கு மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து

கோவை:

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப.,  மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு அரங்கத்தில் மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக பெண் காவல் அதிகாரிகளுக்கு மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பூங்கொத்து வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். 

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஹாசினிஅவர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் அலுவலகத்தில் குழந்தைகள் காப்பகம் அமைத்து தருவதாக கூறினார். 

மேலும், பெண்காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் காண கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

💐💐💐💐💐

No comments

Thank you for your comments