காவலர்கள் பயிற்சி நடைமுறை குறித்து உரையாற்றினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன்
தருமபுரி:
தருமபுரி மாவட்ட வெண்ணாம்பட்டியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் 225 பேர் 7 மாதம் பயிற்சி ஒருமாதம் நடைமுறை பயிற்சி செய்வதற்காக நேற்று பிற்பகல் சேர்ந்தனர். இன்று முதல் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று துவக்க விழாவில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த பயிற்சியில் அவர்களுக்கு வழங்கக்கூடிய பயிற்சி மற்றும் பயிற்சி நடைமுறை குறித்து உரையாற்றினார்.
உடன் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஆன அண்ணாமலை, புஸ்பராஜா, காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments