அவசர உதவி அழைப்புக்கு உடனே தீர்வு.... முதலிடம் பிடித்த கோவை மாநகரம் காவல் துறை..
கோவை
கோவை மாவட்டம் அவசர உதவி கோரும் அழைப்புகளுக்கு விரைந்து சென்று தீர்வு காண்பதில், மாநில அளவில் கோவை மாநகர காவல்துறையினர் முதலிடம் பிடித்துள்ளனர்.
சாலை விபத்து, குற்றச்சம்பவங்கள் நேரிடும்போதும், அவசர போலீஸ் உதவி தேவைப்படும் மற்ற நேரங்களிலும், போலீஸ் கட்டுப்பாட்டு அறையை, '100' என்ற கட்டணம் இல்லாத போன் எண்ணில் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தகவல் வந்தவுடன், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட போலீஸ் ரோந்து குழுவினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு புறப்பட்டு விடுவர். போலீசார் எத்தனை விரைவாக சம்பவ இடத்திற்கு செல்கின்றனர் என்ற விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
மாநில அளவில் சேகரிக்கப்பட்ட இந்த புள்ளி விவர அடிப்படையில், விரைந்து சம்பவயிடம் செல்வதில், கோவை மாநகர போலீசார் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
கரூர் போலீஸ் இரண்டாமிடம், துாத்துக்குடி போலீஸ் மூன்றாமிடத்தில் உள்ளனர்.
இதுகுறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் கூறுகையில்,
மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் நுாற்றுக்கணக்கான போன் அழைப்புகள் வருகின்றன.
அவற்றை நேரில் சென்று பிரச்னைகளுக்கு தீர்வு காண, 24 ரோந்து வாகனங்களுடன் போலீஸ் குழுவினர் பணியில் இருப்பர்.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் வந்தவுடன், ரோந்து குழுவினர் சம்பவ இடம் நோக்கி புறப்படுவர். தற்போது சேகரிக்கப்பட்ட புள்ளி விவரம் அடிப்படையில், போலீஸ் குழுவினர் சென்று சேரும் நேரம் 2 நிமிடம் 59 வினாடியாக உள்ளது.
இதை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன், பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்தார்.
No comments
Thank you for your comments