ஈரோட்டில் 09-03-2022 அன்று மின் பயனீட்டாளர்களின் மாதாந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஈரோடு:
ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அவர்கள் தலைமையில் மின் பயனீட்டாளர்களின் மாதாந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் 09.03.2022 புதன் கிழமை காலை 11.00 மணிக்கு செயற்பொறியாளர் / வினியோகம் / தெற்கு / ஈரோடு கோட்ட அலுவலகத்தில் (948 EVN ரோடு. ஈரோடு-9) நடைபெறும்.
எனவே அக்கூட்டத்தில் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்தூரிபாய் கிராமம், அரச்சலூர், எழுமாத்துர், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளர்கள் மேற்பார்வை பொறியாளர் அவர்களை நேரில் சந்தித்து தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என ஈரோடு மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் பொறி.கு.இந்திராணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments