நகைகடன் தள்ளுபடி சான்றிதழை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் நகைகடன் தள்ளுபடி சான்றிதழை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பயனாளிகளுக்கு வழங்கினார்.
தமிழக முதல்வர்-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக சட்டபேரவையில் கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி என்று கூட்டுறவு துறை பட்ஜெட்டில் அறிவித்ததை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுத்துறை சார்பில் பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர்,சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன்,காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார்,துணை மேயர் குமரகுருநாதன், மாவட்ட கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் லட்சுமா, முருகன், நகர திமுக செயலாளர் சன்பாராண்ட் கே.ஆறுமுகம் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலகள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments