Breaking News

குண்டர் தடுப்புச் சட்டத்தில் பிரபல ரவுடி சிறையிலடைப்பு

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் 11 கொலை, 23 கொலை முயற்சி, கொள்ளை மற்றும் அடிதடி உட்பட மொத்தம் 75 வழக்குகளில் சம்மந்தப்பட்ட விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய சரித்திரப் பதிவேடு கொடுங்குற்றவாளியான தியாகு ( எ ) தியாகராஜன் ( 33 ) த / பெ.குமார், நெ.20 / 70, நேதாஜி தெரு, பொய்யாகுளம், காஞ்சிபுரம் மாவட்டம் என்பவர் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.ஆர்த்தி,  அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க இன்று (16.03.2022) உத்தரவு பிறப்பித்தார்.

No comments

Thank you for your comments