அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கேடயம் வழங்கல்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட அன்னை அஞ்சுகம் அரங்கில் இன்று (24.03.2022) உலக காசநோய் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன் தடுப்பு சிகிச்சை திட்டம், இல்லம் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்திட எரிவாயு உருளை மீது காசநோய் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஓட்டுதல் மற்றும் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கியும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற சாய்ராம் சித்த மருத்துவ கல்லூரி, பாலாஜி மருத்துவக் கல்லூரி, பச்சையப்பன் மகளிர் கல்லூரி மற்றும் காஞ்சிபுரம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (மருத்துவம்) மரு.ஜீவா, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மரு.பிரியா ராஜ், துணை இயக்குனர் (காசநோய் பிரிவு) மரு.காளீஸ்வரி, காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் திரு.குமரகுருநாதன், மாநகராட்சி ஆணையர் திரு.நாராயணன், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் பணியாளர்கள் மற்றும் JEET தொண்டு நிறுவனத்தின் மருத்துவர் மற்றும் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments